சித்திரா பௌர்ணமியையொட்டி தென்னிந்தியாவின் புனித ஸ்தலமான கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரளா எல்லையான பத்துகாணியில் கடல்மட்டத்திலிருந்து 3200 அடி உயரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நேற்று காளிமலை மீது ஏறி தமிழகம் கேரளா மற்றும் பழங்குடியின மக்கள் உட்பட ஐம்பதாயிரத்திற்கும மேற்பட்டோர் , நோய்தொடிகள் அகலவும் நீண்ட ஆயுள் கிடைக்கவும் தமிழகம் மற்றும் கேரளாவிலிருந்தும் அதேபோல் பழங்குடியின பெண்கள் உட்பட ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் விரதமிருந்து விறகுகள் பொங்கல் பானைகளை சுமந்து சுமார் 4கிலோமீட்டர் கரடுமொரடான பாதைவழியான மலைமீதேறி மலையுச்சியில் மருத்துவகுணங்கள் கொண்ட வற்றாத நீர் ஊற்றான காளி தீர்த்தத்தில் தண்ணீர் எடுத்து பொங்கலிட்டு அம்மனை வழிபட்டு வருகின்றனர் முன்னதாக ஆலயத்தின் முன்பு அமைக்கபட்டிருந்த பண்டார அடுப்பில் காலை 9. 30 மணியளவில் ஆலய அர்ச்சகர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சரான பொன்ராதகிருஷ்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி தீபம் ஏற்றி துவங்கி வைத்தனர் தொடர்ந்து ஆலய வளாகம் சுற்று பகுதிகளில் உள்ள பாறைகளில் பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்.