அதி பயங்கர சாலை விபத்து: 6 பேர் பலி

85பார்த்தது
அதி பயங்கர சாலை விபத்து: 6 பேர் பலி
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே மரத்தில் சுற்றுலா வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில், 2 பெண்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 16 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேட்டத்தூர் பகுதியில் கனமழை காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இன்று (செப்., 25) வாகனம் மரத்தில் மோதியுள்ளது. திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றுவிட்டு ராணிப்பேட்டை திரும்பிய போது விபத்து நடந்துள்ளது.

தொடர்புடைய செய்தி