கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் களியங்காடு சிவபுரம் சிவன் கோவிலில் பிரதோஷம் வழிபாடு நேற்று நடைபெற்றது. இதையொட்டி மாலை 5. 30 மணிக்கு சிவனுக்கும், நந்திக்கும் மஞ்சள், அரிசி மாவு, பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகம், 6. 30 மணிக்கு அலங்காரம், பிரதோஷ சிறப்பு தீபாராதனை, 6. 40 மணிக்கு அனைத்து சாமிகளுக்கும் தீபா ராதனை தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை தலைவர் சின்னையன், செயலாளர் ராஜகோபால் ஆகியோர் செய்திருந்தனர்.