தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் ஆர்ப்பாட்டம்.

68பார்த்தது
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், தமிழகத்தில் தலித் தலைவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரியும், தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நேற்று நாகர்கோவிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்வில் மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி