குமரியில் மளிகை கடைக்காரருக்கு 5 ஆண்டு ஜெயில்.

1091பார்த்தது
கன்னியாகுமரி ஆரோக்கியபுரத்தை சேர்ந்தவர் தாசன் (வயது 55), அப்பகுதியில்
மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 4-11-2019 அன்று தனது கடைக்கு பொருட்கள் வாங்க வந்த 11வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி தனக்கு நடந்த கொடுமை குறித்து தன் பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். இதைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் தாசனை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது தாசன் சம்பவத்துக்கு 2 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த மற்றொரு 13 வயது சிறுமிக்கும் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து 2
சம்பவம் குறித்தும் ஒரே வழக்காக பதிவு செய்து தாசனை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு நாகர்கோவிலில் உள்ள போக்சோ கோர்ட்டில் நடந்தது. வழக்கை நீதிபதி ஜோசப் ஜாய் விசாரணை நடத்தினார். இந்த வழக்கில் நேற்று 'தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது குற்றம் சாட்டப் பட்ட தாசனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 40 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜோசப் ஜாய் உத்தரவிட்டார். அபராதத்தை கட்ட தவறினால் கூடுதலாக ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது.

தொடர்புடைய செய்தி