காதலி பிரிந்து சென்றதால் அரசு போக்குவரத்து ஊழியர் தற்கொலை

60பார்த்தது
காதலி பிரிந்து சென்றதால் அரசு போக்குவரத்து ஊழியர் தற்கொலை
அம்மாண்டிவிளையை  சேர்ந்தவர் சுரேஷ் (38). இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார்.    இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ஒரு பெண்ணுடன் கடந்த 3 மாதங்களாக  குடும்பம் நடத்தி வந்தார். இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதால்  அந்த பெண் கோபித்து கொண்டு அவரது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார்.
    அதன் பின்னர் சுரேஷ் அந்தப் பெண்ணிடம் சென்று சமரசமாகி, தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். அந்த பெண் அவருடன் செல்ல மறுத்ததால், மனமுடைந்த சுரேஷ் சம்பவ தினம் அந்த பெண் வீட்டு  முன்பு விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

     அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, குமரி மருத்துவ கல்லூரியில் சேர்த்தனர்.   ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது தொடர்பான புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி