வெள்ளிச்சந்தை அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை

71பார்த்தது
வெள்ளிச்சந்தை அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை
வெள்ளிச் சந்தை அருகே உள்ள பேயோடு பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி (74). கூலித் தொழிலாளி. இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த மூன்று வருடமாக அந்தப் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் உடல் நிலை சரியாகவில்லை. இதனால் விரக்தி அடைந்த ராஜமணி கடந்த சில நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

       இந்த நிலையில் சம்பவ தினம் ராஜமணி விஷம் குடித்து வீட்டில் மயங்கிய நிலையில் காணப்பட்டார். உறவினர்கள் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம்  அரசு ஆஸ்பத்திரியில்  சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து அவரது மகன் கண்ணன் என்பவர் வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி