டெல்லி அமைச்சர் ராஜினாமா

71பார்த்தது
டெல்லி அமைச்சர் ராஜினாமா
மக்களவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் டெல்லி ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. சமூக நலத்துறையை நிர்வகித்து வந்த ராஜ்குமார் ஆனந்த் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். ஊழலில் சிக்கித் தவிக்கும் கட்சியில் தன்னால் நீடிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ராஜ்குமார் வீட்டில் ED சோதனை நடத்தியது. இந்த நிலையில் அவர் ஆம் ஆத்மியில் இருந்து விலகியிருப்பது கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி