தேங்காய்பட்டணம் கடலில் மூழ்கி பெண் பலி - சோகம்

4027பார்த்தது
தேங்காய்பட்டணம் கடலில் மூழ்கி பெண் பலி - சோகம்
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் அருகே பைங்குளம் அனந்தமங்கலத்தை சேர்ந்தவர் சதாசிவன்(57). கூலித்தொழிலாளி. கடந்த 5 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி கவுசல்யா (51). இவர்களுக்கு 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். கவுசல்யா அடிக்கடி கடல் நீர் எடுத்து வந்து வீட்டு பூஜையறையில் தெளிப்பது வழக்கம். இதனிடையே நேற்று காலை அவர் வீட்டிலிருந்து புறப்பட்டு தேங்காய்பட்டணம் கடல் பகுதியில் கடல் நீர் எடுத்து வர சென்றார்.

அவர் கடலில் கடல் நீர் எடுக்கும்போது எதிர்ப்பாராமல் நிலை தடுமாறி கடலில் விழுந்தார். அப்போது எழுந்த அலை அவரை இழுத்து சென்றது. உடனே கவுசல்யா சப்தமிட்டார். இதனை கரைப்பகுதியிலிருந்து கவனித்த பொதுமக்கள் சிலர் விரைந்து சென்று கடலில் குதித்து அவரை மீட்டு கரை சேர்த்தனர். பின்னர் அவரை குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் கவுசல்யா ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர்.

இது குறித்து அவரது மகன் சதீஷ்குமார் குளச்சல் மரைன் போலீசில் புகார் செய்தார். மரைன் சப் - இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து அவரது உடலை பிரேத பரிசோதனை மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அனந்தமங்கலம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி