திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தவர் அண்ணாமலை. இவர், நேற்று தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இதில், தலையில் பலத்த காயமடைந்த அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த அவருக்கு இன்று மூளைச் சாவு ஏற்பட்டு உயிரிழந்தார். தொடர்ந்து உயிரிழந்த அண்ணாமலையின் கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளது.