குப்பைத் தொட்டியில் சடலமாகக் கிடந்த ஆண் சிசு

84பார்த்தது
குப்பைத் தொட்டியில் சடலமாகக் கிடந்த ஆண் சிசு
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காவல்காரன்பட்டியில் ஆதிதிராவிடர் காலனி சமுதாயக்கூடம் அமைந்துள்ளது. இந்த சமுதாயக்கூடத்திற்கு அருகேயுள்ள குப்பைத் தொட்டியில் பிறந்து சிலமணி நேரமேயான நிலையில், ஆண் சிசு சடலமாக கிடந்துள்ளது. அதனை சுத்தி திரண்ட நாய்கள் சத்தமிட்டுள்ளன. அப்போது அப்பகுதியில் உள்ளவர்கள் சென்று பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சிசுவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி