குமரி: அரசு பேருந்து ஓட்டுநரின் அலட்சியம்!

9155பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் தாழக்குடி பகுதியில் அவ்வழியே வந்த அரசு பேருந்து, நிறுத்தத்தில் நிற்காமல் பயணியை சில அடி தூரம் தள்ளி நிறுத்தியது. அப்போது நிறுத்ததில் காத்திருந்த பள்ளி மாணவிகள் ஓடி வந்து பேருந்தில் ஏற முயன்றனர். ஆனால் ஓட்டுநர் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக பேருந்தை அங்கிருந்து எடுத்துச்சென்றார்.

இது குறித்த சிசிடிவி காட்சி பதிவுகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி