உணவு கேட்டரிங் தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்காக அன்னபூர்ணா யோஜனா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் ரூ.50 ஆயிரம் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் சமையல் உபகரணங்கள், குளிர்சாதனப்பெட்டி, எரிவாயு இணைப்பு, சாப்பாட்டு மேஜைகள் வாங்கலாம். இந்தக் கடன்களின் வட்டி விகிதங்கள் மார்க்கெட் நிலவரத்தை பொறுத்து மாறுபடும். கடன் தொகையை 3 ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்த வேண்டும். எஸ்பிஐ கிளையைத் தொடர்பு கொண்டு பெண்கள் இந்தக் கடனைப் பெறலாம்.