கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்காக பாட்டு கச்சேரி நடந்தது. மறைந்த விஜயகாந்த் பாடலுக்கு பெண்களுடன் பயணிகள் குத்தாட்டம் போட்டனர். தொடர் விடுமுறை மற்றும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக ஏராளமானவர்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு கூட்டம் கூட்டமாக உடமைகளுடன் வந்தனர். இதனால் பேருந்து நிலையம் முழுவதும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
ஏராளமான பயணிகள் பேருந்துகளுக்காக காத்திருந்தனர். பயணிகள் நேரம் கழிப்பதற்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் நுழைவாயிலில் பாட்டு கச்சேரி நடத்தப்பட்டது. மறைந்த விஜயகாந்த் அவர்களின் பாடலுக்கு கச்சேரி நடத்திய பெண்களுடன் பயணிகள் குத்தாட்டம் போட்டனர்.ஏராளமானவர்கள் பேருந்து வரும் வரை காத்திருந்து ரசித்து சென்றனர்.