லோக்சபா தேர்தலின் போது முறைகேடாக மது விற்றால் வழக்கு

61பார்த்தது
லோக்சபா தேர்தலின் போது முறைகேடாக மது விற்றால் வழக்கு
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்தில், 93 மதுபானக் கடைகள், 42 மதுக்கூடங்கள் இயங்கி வருகின்றன.

இதில், முறைகேடாக மது விற்பனையை தடுக்கும் நடவடிக்கையாக, ஒவ்வொரு நாள் இரவு மற்றும் காலை நேரங்களில், மது கூடத்துடன் இருக்கும் மதுபான கடைகளை, தெற்கு மாவட்ட மேலாளர் அடிக்கடி ஆய்வு நடத்தி வருகிறார்.

லோக்சபா தேர்தலை முன்னிட்டு, மது மற்றும் பீர் வகைகளை மொத்தமாக விற்பனை செய்யக்கூடாது. டாஸ்மாக் விதிகளின் கீழ் பகல் 12: 00 மணி முதல் இரவு 10: 00 மணி வரையில், மதுக்கூடங்கள் செயல்பட வேண்டும்.

விதி மீறினால், மது விலக்கு அமலாக்கப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும். மேலும், மதுபானக் கடைகளில் நியமிக்கப்பட்ட பணியாளர்கள் மட்டுமே பணியில் இருக்க வேண்டும் என, காஞ்சிபுரம் டாஸ்மாக் தெற்கு மாவட்ட மேலாளர் கேசவன் தெரிவித்து உள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி