சல்மான் கான் வீட்டிற்கு சென்ற முதல்வர்! (காணொளி)

78பார்த்தது
மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, பாலிவுட் நடிகர் சல்மான் கானை சந்தித்தார். துப்பாக்கி சூடு சம்பவம் குறித்தும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சல்மான் கான் வீட்டிற்கு சென்று முதல்வர் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார். துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக போலீசார் எடுத்த நடவடிக்கைகள் குறித்து சல்மானிடம் பேசினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை கடந்த 14ம் தேதி மும்பை போலீசார் கைது செய்தனர். இரண்டு நாட்களுக்கு முன்பு சல்மான் கான் வீட்டில் துப்பாக்கி சூடு நடந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி