உத்திரமேரூர் அருகே மூன்றாம் பாலினத்தவர் தூக்கிட்டு தற்கொலை.

52பார்த்தது
உத்திரமேரூர் அருகே மூன்றாம் பாலினத்தவர் தூக்கிட்டு தற்கொலை.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த பெருநகர் தலையாரி தோப்பு இருளர் குடியிருப்பை சேர்ந்தவர் சங்கர் அவரது மூன்றாம் பாலினத்தை சேர்ந்த மகன் மாசிலாமணி என்கின்ற சத்திய பிரியா வயது 27.

அவரது அப்பா, அம்மா இருவரும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர். தற்போது அவரது சித்தி ராணி என்பவர் வீட்டில் அவர்களோடு வசித்து வந்தார்.

நேற்று இரவு 7 மணி அளவில் வீட்டை விட்டு கிளம்பி சென்றவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் மானாமதி கூட்டு ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே தைலம் தோப்பில் தூக்கில் தொங்கியபடி சடலம் ஒன்று உள்ளதாக பொதுமக்கள் பெருநகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

அங்கு சென்ற போலிசார் அந்த உடலை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த பெருநகர் காவல் உதவி ஆய்வாளர் கேசவவேல் விசாரணையில் இறந்த நபர் மேற்படி மாசிலாமணி என்கிற சத்யபிரியா என்பது தெரியவந்தது.

தற்சமயம் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் உத்திரமேரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி