அரசு மதுபான கடையில் மதுபானங்கள் கொள்ளை

76பார்த்தது
அச்சரப்பாக்கம் அருகே பெரும்பேர்கண்டிகையில் உள்ள அரசு மதுபான கடையில் இரவு கொள்ளையர்கள் புகுந்து மதுபானங்கள் கொள்ளை

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே பெரும்பேர்கண்டிகை டாஸ்மாக் கடையில் விடியற்காலை 2 மணி அளவில் மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையின் வெளியே இருந்த சிசிடிவி கேமராவை உடைத்து உள்ளனர். அதனைத் தொடர்ந்து, கடையின் வெளியில் இருந்த இரும்பு கேட்டின் பூட்டுகளை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.
கடையின் ஷெட்டரை கடப்பாரை கொண்டு நீக்கிவிட்டு உள்ளே சென்றுள்ளனர்.
கடையில் இருந்த மதுபானங்கள் மற்றும் மேஜையின் மேல் இருந்த சில்லறை பணங்களை எடுத்து உள்ளனர். அப்பொழுது இரவு ரோந்து போலீசார் வருவதை சத்தம் கேட்டு திருட வந்த கொள்ளையர்கள் ஓடி உள்ளனர்.

மேலும், டாஸ்மாக் கடையிலிருந்த பணம் வைக்கும் இரும்பு லாக்கரை உடைக்க முயற்சி செய்துள்ளனர். இதனால் நேற்று முன் தினம் மற்றும் நேற்று விற்பனை செய்த ரூ 12 லட்சம் தப்பின.

தொடர்புடைய செய்தி