கிறிஸ்தவ தேவாலயங்களில் சென்று வாக்கசேகரித்த அதிமுக எம்எல்ஏ

66பார்த்தது
கிறிஸ்தவ தேவாலயங்களில்
ஜபம் முடித்து விட்டு வந்த பொது மக்களிடம் வாக்கு சேகரிப்பு


செங்கல்பட்டு மாவட்டம்
மதுராந்தகம், பூதூர், பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் ஜபம் முடித்துவிட்டு வந்த பொதுமக்களிடம் காஞ்சிபுரம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் அவர்களை ஆதரித்து மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் அவர்கள் துண்டு பிரசுரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்துக்கு தீவிர வாக்கு சேகரிப்பு ஈடுபட்டார். இந்த நிகழ்ச்சியில் மதுராந்தகம் அம்மா பேரவை செயலாளர் வழக்கறிஞர் எம்பி. சீனிவாசன், மதுராந்தகம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வையாவூர் வி. ஜி. குமரன், மற்றும் அதிமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி