மாங்காய் சீசன் நேரத்தில் பற்றி எரிந்த மாந்தோப்பு

50பார்த்தது
மாங்காய் சீசன் நேரத்தில் பற்றி எரிந்த மாந்தோப்பு
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி மேட்டு தெரு பகுதியில் சென்னையில் உள்ள தனிநபருக்கு சொந்தமான 10 ஏக்கர் பரப்பளவிலான மாந்தோப்பு ஒன்று உள்ளது.

மாங்காய் தற்போது சீசன் ஆரம்பித்து பூபூத்து காய்க்க தொடங்கியுள்ளது, இந்நிலையில் நேற்று மாலை திடீரென இந்த தோப்பில் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.

இதனால் ஒரே புகை மூட்டமாகி அப்பகுதியில் உள்ளோருக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்த மாமல்லபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் இன்பராஜ் மற்றும் சிறுசேரி தீயணைப்பு நிலைய முதன்மை தீயணைப்பாளர் ரமேஷ்பாபு தலைமையிலான வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

மாங்காய் சீசன் நேரத்தில் ஏற்பட்ட இந்த விபத்தால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. தீவிபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி