சிங்கப்பெருமாள் கோவில் அருகே 650 கிலோ குட்கா பறிமுதல்

69பார்த்தது
சிங்கப்பெருமாள் கோவில் அருகே போலீசாரின் வாகன சோதனையில் சிக்கிய வாலிபர்: 650 கிலோ குட்கா மற்றும் டாட்டா ஏஸ் வாகனம் பறிமுதல்.!!

சென்னை புறநகர் பகுதியான சிங்கப்பெருமாள் கோவில் அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறைமலைநகர் காவல் நிலைய சட்ட ஒழுங்கு காவல் ஆய்வாளர் கோவிந்தராஜன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்

அப்போது தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு மார்க்கமாக சென்ற tata ace வாகனத்தை மடக்கி பிடித்து சோதனை செய்தனர் அப்போது ஓட்டுநர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் வாகனத்தை சோதனை செய்தனர்

அப்போது உள்ளே குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது இதனை அடுத்து வாலிபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில் அவர் தாம்பரத்தைச் சேர்ந்த நிர்மல் குமார் வயது (32) என்பது தெரியவந்தது. மேலும் குட்காவை கடத்திச் சென்றதும் தெரிய வந்தது

பின்பு அவர் மீது வழக்கு பதிவு செய்த மறைமலை நகர் போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்

மேலும் 650 கிலோ குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டாடா ace வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி