செய்யூரில் அரசு மரியாதையுடன் இறந்த எஸ்ஐ உடலுக்கு அஞ்சலி

60பார்த்தது
33 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இறந்த எஸ்ஐ உடலுக்கு அஞ்சலி

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த வெண்ணாங்குப்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் குமார் இவர் அணைக்கட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணி செய்து வந்தார்.

கடந்த பத்து நாட்களுக்கு முன்பு பவுஞ்சூரில் இருந்து அவரது வீட்டுக்கு பணியை முடித்துவிட்டு செல்லும்பொழுது செய்யூரில் டாடா மேஜிக் வாகனமானது குமார் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

காவலர்கள் பணியில் இருக்கும் பொழுது இறந்தால் இறந்த உடலுக்கு அரசு மரியாதை செலுத்துவது வழக்கம்,

அதன்படி சாலை விபத்தில் இறந்த சிறப்பு உதவிய ஆய்வாளர் குமார் உடலுக்கு செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் வானத்தை நோக்கி 33 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவரது உடலுக்கு காவலர்கள் அஞ்சலி செலுத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி