செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

68பார்த்தது
செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
உத்திரமேரூர் ஒன்றியம், மானாம்பதி கிராமம், மேட்டுத்தெருவில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த மேட்டுத்தெருவினர் மற்றும் பக்தர்கள் முடிவு செய்தனர். அதன்படி கோவிலில் பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் செய்து முடிக்கப்பட்டன.

கும்பாபிஷேகத்தையொட்டி, நேற்று முன்தினம், காலை 8: 00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜையுடன் யாக சாலை பூஜை துவங்கியது.

நேற்று, காலை 9: 30 மணிக்கு யாகசாலையில் இருந்து கலசம் புறப்பாடு நடந்தது. 9: 45 மணிக்கு செல்வ விநாயகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர்.

தொடர்ந்து மஹா அபிஷேகமும், மஹா தீபாராதனையும், பிரசாத வினியோகமும், மாலை 6: 00 மணிக்கு வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண வைபவம் நடந்தது. விழாவில், மானாம்பதி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி