மூட்டை மூட்டையாய் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்

55பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் அடுத்த பழவேலி சிங்கப்பெருமாள்கோயில் ஆகிய பகுதிகளில் கோழி இறைச்சி மற்றும் மீன் இறைச்சி கடைகள் அதிக அளவில் உள்ளன இந்த இறைச்சி கடைகளின் கழிவு இறைச்சிகளை சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டுகின்றனர்.

இதனால் அந்த கழிவுகளை காகங்கள், நாய்கள் அந்த பகுதி முழுவதும் சுற்றி திருந்து சாலைகளில் சண்டையிடுவதால் வாகனங்களில் விழுந்தது விபத்துகள் ஏற்படுத்துகிறது.

மேலும் இறைச்சி கழிவுகள் துர்நாற்றம் வீசுவதாலும் சுகாதார சீர்கேடாகவும் இருப்பதால் வாகன ஓட்டிகள் முகம் சுழிக்கும் அளவிற்கு உள்ளது.

குறிப்பாக இந்த சாலையை கடந்து செல்லும்போது வாகன ஓட்டிகள் தங்கள் மூக்கை பிடித்துக் கொண்டே நகரும் அவல நிலை உருவாக்கி உள்ளது

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக போர்க்கால அடிப்படையில் இறைச்சிகளை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் இதுபோல் இனிமே இங்கு யாரும் கொட்டினால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி