ராமாபுரத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

55பார்த்தது
அச்சரப்பாக்கம் வடக்கு ஒன்றியத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் வளர்மதி கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்


செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட ராமாபுரம் பேருந்து நிலையம் அருகாமையில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சியை அச்சரப்பாக்கம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் பெரும்பாக்கம் விவேகானந்தன் ஏற்பாட்டில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் வளர்மதி, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ் ஆறுமுகம், மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், இவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களின் கோடை வெப்பத்தை தணிக்க இளநீர், வெள்ளரிக்காய், தர்பூசணி, நுங்கு, நீர்மோர், பழரசங்கள், குளிர் பானங்கள், இவைகளை பொதுமக்களுக்கு வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் முன்னதாக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மழை தூவி மரியாதை செய்தனர் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆனூர் பக்தவச்சலம் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி