மின்கம்பம் சேதத்தால் விபத்து அபாயம்

54பார்த்தது
மின்கம்பம் சேதத்தால் விபத்து அபாயம்
காஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துார் ஊராட்சி வழியாக, தென்னேரி ஏரி நீர்வரத்து கால்வாய் கரை ஓரத்தில், மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தில் இருந்து, ஏனாத்துார் - பி. எம். , சிட்டி குடிநீர் வினியோக ஆழ்துளை கிணறுக்கு, மின் இணைப்பு செல்கிறது.

இந்த மின்கம்பம் சேதம் ஏற்பட்டு, எலும்புக்கூடாக காட்சி அளிக்கிறது. இந்த கம்பத்தின் மீது ஏறி, மின்விளக்கு பொருத்த முடியவில்லை. மேலும், மின் மோட்டாரில் பியூஸ் போனால், மின் இணைப்பு சரிபார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதவிர, சாலை ஓரத்தில் மின்கம்பம் இருப்பதால், பலமான காற்று அடிக்கும் போது, கம்பம் முறிவு ஏற்பட்டு சாலை செல்லும் வாகன ஓட்டிகள் மீது விழும் அபாயம் உள்ளது.

எனவே, சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி