அங்கன்வாடி மையம் பழுதடைந்துள்ளதால் பொதுமக்கள் குற்றச்சாட்டு

79பார்த்தது
அச்சரப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட வஜ்ராபுரத்தில் உள்ள அங்கன்வாடி மையம் பழுதடைந்துள்ளதால் புதிதாக கட்டித் தரக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட
வார்டு எண்: 15 - ல் உள்ள வஜ்ஜிராபுரம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது.

இந்தப் பகுதியில் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன இந்த அங்கன்வாடி மையத்தில் 50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர்.

இந்த அங்கன்வாடி கட்டிட மையம் பழுதடைந்து ஓராண்டுக்கு மேலாகிறது. தற்பொழுது அங்கன்வாடி மையம் அங்கன்வாடி பணியாளர் வீட்டில் இயங்கி வருகிறது.

அங்கன்வாடி மையம் இல்லாததால் அங்குள்ள மக்கள் குழந்தைகளை தனிநபர் வீட்டில் கல்வி பயில பாதுகாப்பாக அனுப்ப அச்சப்படுகின்றனர்.

ஆகவே, இந்த அங்கன்வாடி மையத்தை சீரமைத்து தர வேண்டுமென மாவட்ட ஆட்சியர் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் இப்பகுதி மக்கள் மிகவும் வேதனைக்கு உள்ளாகி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி