ஆக்கிரமிப்பு அகற்ற முயன்றபொழுது பொதுமக்கள் முற்றுகை

1883பார்த்தது
எலப்பாக்கம் கூட்டுச் சாலையில் இருந்து 1 கிலோமீட்டர் தூரத்திற்கு மாநில நெடுஞ்சாலையின் இரு பக்கமும் மழைநீர் மற்றும் கழிவு நீர் வடிகால் கால்வாய்அமைக்கப்படுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு புறம் முழுவதும் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

மற்றொருபுறம் கால்வாய் எடுப்பதற்கான பணிகளுக்கு முன்னதாக ஆக்கிரப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். சரியான அளவீடு செய்து கழிவுநீர்கால்வாய் மேற்கொள்ளப்படவேண்டும் என கடந்த 10 தினங்களுக்கு முன்பாக மாநில நெடுஞ்சாலை துறையில் உதவி பொறியாளர் அலுவலகத்தை பொதுமக்கள்முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்செய்தனர்.

அதனைத் தொடர்ந்து, இன்று காலை கலைஞர் நகர் பகுதியில் மீண்டும் சாலையின் வலது பக்கம் உள்ள பகுதியில் சாலையின்ஆக்கிரமிப்புகளைஅகற்றமாநிலநெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் தனது பணியாளருடன் ஜேசிபி எந்திரத்தை கொண்டு வந்து ஆக்கிரப்பை அகற்ற முயலும் போது பொதுமக்கள் சரியான முறையில் அளவிடு செய்து கால்வாய் அமைப்பதற்கான பணிகளைநெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை என அதிகாரியிடம்வாக்குவாதத்தில்ஈடுபட்டனர்.

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வந்து சாலை பணியினை மேற்கொள்ள வரும் பொழுது பொதுமக்களை மரியாதை குறைவாகதரக்குறைவாகவும்பேசிஉதவிசெயற்பொறியாளர் பொதுமக்களிடம்
வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது பொதுமக்கள் கூச்சல் போட அதிகாரிகள்திரும்பிச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி