ஸ்ரீ பொன்னியம்மன் ஆலய ஆடி மாத தேர் திருவிழா

75பார்த்தது
நெசப்பாக்கம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் ஆலய ஆடி மாத தேர் திருவிழா


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த நெசப்பாக்கம் கிராமத்தில் அருள் பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாத தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம் இந்த நிலையில் இந்த ஆண்டு ஆடி மாத தேர் திருவிழாவை முன்னிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது இதனைத் தொடர்ந்து ஏழாம் நாள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு ஸ்ரீ பொன்னியம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து எட்டாம் நாளான இன்று ஸ்ரீ பொன்னியம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அம்மனுக்கு காப்பு கட்டி விரதம் இருந்தால் பக்தர்கள் அலகு குத்தியும் காவடி எடுத்தும் முதுகில் முள் குத்திக் கொண்டு தொங்கிய படியும் ஸ்ரீ பொன்னியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி