தேங்காய் விலை கிடுகிடு உயர்வு: கிலோ ரூ.50க்கு விற்பனை

74பார்த்தது
தஞ்சாவூர் உழவர் சந்தையில் தேங்காய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நாஞ்சிக்கோட்டை உழவர் சந்தைக்கு பேராவூரணி, திருவையாறு உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து விவசாயிகள் தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். வரத்து குறைந்துள்ளதால், தேங்காய் விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.50க்கு விற்கப்படுகிறது. ரூ.10க்கு விற்பனை செய்யப்பட்ட சிறிய தேங்காய் ரூ.15க்கும், ரூ.25க்கு விற்கப்பட்ட தேங்காய் ரூ.30க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி