மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் உள்ள நித்ய கல்யாண பெருமாள் கோவிலில், ஏப். , 23ம் தேதி சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. சுவாமிக்கு தினசரி காலை, இரவு, சிறப்பு வழிபாடு நடத்தி, வாகன சேவையாற்றி, வீதியுலா செல்கிறார்.
ஐந்தாம் நாளான நேற்று முன்தினம், சுவாமி கருட சேவையாற்றினார். அன்று காலை, பெருமாள், மோகினி நாயகியாக தோன்றி, பத்மாசூரனை அழித்ததன் நினைவாக, பல்லக்கில் நாச்சியாராக எழுந்தருளி வீதியுலா சென்றார்.
மாலை, பெருமாள் மற்றும் தேவியருக்கு திருமஞ்சனம் நடந்தது. இரவு, பெருமாள் ஊஞ்சல் சேவையாற்றினார். இரவு 11: 00 மணிக்கு கருட வாகனத்தில் எழுந்தருளி சேவையாற்றி, வீதியுலா சென்றார்.
இன்று காலை 10: 00 மணிக்கு, திருத்தேரில் உலா செல்கிறார். "