நுாலகங்களில் நாளிதழ் இல்லை கூடுவாஞ்சேரி வாசகர்கள் புகார்

68பார்த்தது
நுாலகங்களில் நாளிதழ் இல்லை கூடுவாஞ்சேரி வாசகர்கள் புகார்
, நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சியில் மூன்று நுாலகங்கள் உள்ளன. நந்திவரம் மற்றும் கூடுவாஞ்சேரி ஜி. எஸ். டி. , சாலையில் தலா ஒரு ஊர்ப்புற நுாலகமும், கூடுவாஞ்சேரி காந்தி தெருவில் கிளை நுாலகமும் செயல்பட்டு வருகின்றன.

இந்த நுாலகங்கள், காலை 8: 30 மணி முதல், 11: 30 மணி வரையும், மாலை 4: 00 மணி முதல் இரவு 7: 00 மணிவரையும் திறந்திருக்கும்.

இந்த நுாலகங்களில் சுற்றுவட்டார பகுதிவாசிகள், மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் பட்டதாரிகள், தினசரி நாளிதழ்கள் மற்றும் வார இதழ்களை படித்துவந்தனர்.

ஆனால், தற்போது நாளிதழ்கள் வருவதில்லை என, வாசகர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி