திருநங்கை கொலை வழக்கில் திருப்பம்

2227பார்த்தது
திருநங்கை கொலை வழக்கில் திருப்பம்
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார், கிளாய் கிராமத்தில், கடந்த செப். , 2017ல், இளைஞர் ஒருவரின் சடலத்தை எரிந்த நிலையில் போலீசார் மீட்டனர்.கிளாய் பாரதியார் நகரைச் சேர்ந்த கார்த்திக், 25, என்பவர், நண்பர்களுடன் சேர்ந்து சின்னராஜி என்ற திருநங்கையை கொலை செய்ததாக கிளாய் கிராம நிர்வாக அலுவலர் சிவகுமார் என்பவரிடம் சரணடைந்தார்.

கார்த்திக் அளித்த வாக்குமூலம்: சின்னராஜி என்ற திருநங்கையை அழைத்துக் கொண்டு ஏரிக்கரை செல்லும்போது, நண்பர்கள் சத்யா, 25, பாலு, 26, ஆகியோர் உடன் வந்தனர். அப்போது, வலுக்கட்டாயமாக திருநங்கையுடன் பாலியல் உறவில் ஈடுபட்டோம். எதிர்ப்பு தெரிவித்த திருநங்கையின் கழுத்தை அறுத்து கொலை செய்தோம். உடலை எரித்து குப்பை மேட்டில் வீசினோம். இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக காவல் ஆய்வாளர் நடராஜன், அவரைத் தொடர்ந்து விநாயகம் ஆகியோர் செயல்பட்டனர். ஸ்ரீபெரும்புதுார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அங்கிருந்து காஞ்சிபுரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தற்கு வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

இவ்வழக்கை விசாரித்த, மாவட்ட நீதிபதி செம்மல், இவ்வழக்கை செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி