தமிழ்நாட்டில் யானைகள் வழித்தடம் என அறிவிக்கப்பட்டுள்ள 38 வழித்தடங்கள் குறித்து சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணை இன்று (ஜூன் 28) நடைபெற்றது. அப்போது, "கோவையில், யானைகள் வழித்தடத்தில் தொழில்நுட்ப நகரம் அமைக்கும் கட்டுமான பணிகள், தற்போதைய நிலையிலேயே நீடிக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது. மேலும், யானைகள் வழித்தட ஆக்கிரமிப்புகள் கண்டறிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.