மதுரையில் 3 நாட்களுக்கு குடீநீர் வராது

64பார்த்தது
மதுரையில் 3 நாட்களுக்கு குடீநீர் வராது
மதுரை மாநகராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் குடிநீர் ஆதாரமாக வைகை அணை விளங்கி வருகிறது. இந்நிலையில், வைகை அணையில் பொதுப்பணித்துறை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட உள்ள பராமரிப்பு பணிகள் காரணாக மதுரை மாநகராட்சி பகுதியில் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற ஜூலை 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி