விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் துடிதுடித்து பலி

1095பார்த்தது
விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் துடிதுடித்து பலி
சென்னை மையிலாப்பூரை சேர்ந்த தயாள் சுந்தரம், கீதா தம்பதியின் மகன் தனியார் பள்ளி ஒன்றில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் தினமும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கூடைப்பந்து பயிற்சிக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் சிறுவன் கூடைப்பந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அங்கிருந்த மின்சார கம்பியை தொட்டதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி