தி. மு. க. , அரசை கண்டித்து அ. தி. மு. க. , ஆர்ப்பாட்டம்

66பார்த்தது
கள்ளக்குறிச்சியில் தி. மு. க. , அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் இறந்தனர். கள்ளச்சாராயத்தைக் ஒழிக்கத் தவறிய தி. மு. க. , அரசை கண்டித்து அ. தி. மு. க. , சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

அண்ணா நகர் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கினார். செந்தில்குமார் எம். எல். ஏ. , வரவேற்றார்.

அ. தி. மு. க. , பொதுச் செயலாளர் பழனிசாமி கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் மோகன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநிலத் தலைவர் சத்யன், முன்னாள் எம். பி. , காமராஜ், முன்னாள் எம். எல். ஏ. , க்கள் அழகுவேல்பாபு, பிரபு, ஜெ. , பேரவை செயலாளர் ஞானவேல்.

தகவல் தொழில்நுட்ப பிரிவு அருண், ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகர், தேவேந்திரன், அய்யப்பா, கிருஷ்ணமூர்த்தி, கதிர் தண்டபாணி, அருணகிரி, துரைராஜ், ராஜேந்திரன், அய்யம்பெருமாள், பழனி, சேகர், சந்தோஷ், மணிராஜ், செண்பகவேல், சந்திரன், ஏகாம்பரம், ராமலிங்கம், எஸ். ஏ. , கிருஷ்ணமூர்த்தி, மேலப்பட்டு ராஜேந்திரன் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி