உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள சராய் மம்ராஜ் பகுதியில் பைக் மீது டேங்கர் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். சோரோ பெட்ரோல் பம்ப் அருகே இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் இறந்தவர்கள் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள மீர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த விகாஸ் (வயது 25), சும்மாரி (வயது 60), ஜனதா (வயது 34), திவானா (வயது 7) மற்றும் லக்ஷ்மி (8 மாதங்கள்) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.