நூலகத்திற்கு நன்கொடை வழங்கல்

57பார்த்தது
நூலகத்திற்கு நன்கொடை வழங்கல்
மணலூர்பேட்டை கிளை  நூலகத்திற்கு ரூபாய் 5000. 00 மதிப்புள்ள தமிழ் காமிக்ஸ் நூல்கள் நன்கொடை
தமிழ்நாடு அரசு பொதுநூலகத்துறை ஒருங்கிணைந்த விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட நூலக ஆணைக்குழுவின்கீழ் இயங்கிவரும் மணலூர்பேட்டை கிளை  நூலகத்திற்கு ரூபாய் 5000. 00 மதிப்புள்ள தமிழ் காமிக்ஸ் நூல்களை சிறப்பு உதவி ஆய்வாளர் சி. ஜான்சைமன் நன்கொடையாக வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் கிழக்கு காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வந்த மணலூர்பேட்டையை சேர்ந்த ஜான் சைமன் சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றதையடுத்து இன்று மணலூர்பேட்டை கிளை நூலகத்திற்கு நேரில் வருகை தந்து நாகராஜ சேதுபதி, மணிவாசகம் கோபால் ஆகியோர் வழங்கிய சிவகாசி லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ், சன்ஷைன் லைப்ரரி, லயன் கிராபிக்ஸ் நாவல் ஆகிய பதிப்பகங்களின் தமிழ் காமிக்ஸ்  நூல்களை வாசகர்களின் பயன்பாட்டிற்காக நல்நூலகர் மு. அன்பழகன் அவர்களிடம்  சிறப்பு உதவி ஆய்வாளர் சி. ஜான்சைமன் நன்கொடையாக வழங்கினார்.

அப்பொழுது மலையப்பன் மற்றும் வாசகர் வட்டத்தினர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி