திமுகவின் முப்பெரும் விழா - ஒரு லட்சம் பேர் பங்கேற்பு

65பார்த்தது
திமுகவின் முப்பெரும் விழா - ஒரு லட்சம் பேர் பங்கேற்பு
கோவை கொடிசியா மைதானத்தில் திமுகவின் முப்பெரும் விழா இன்று (ஜூன் 15) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பது மற்றும் கலைஞர் நூற்றாண்டு நிறைவு என முப்பெரும் விழா நடைபெறுகிறது. இதில், 40 தொகுதி எம்பி-க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் பங்கேற்க உள்ளனர். திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். சுமார், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி