கச்சிராயபாளையம்: குட்கா விற்றவர் கைது

76பார்த்தது
கச்சிராயபாளையத்தில் குட்கா விற்ற கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் சபரிமலை தலமையிலான போலீசார் நேற்று கச்சிராயபாளையம் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது பழைய பஸ் நிலையம் அருகே உள்ள மனோகரன், 62; என்பவருக்கு சொந்தமான மளிகைக் கடையில் சோதனை நடத்தியதில், 20 குட்கா பாக்கெட்டுகளை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.


உடன், மனோகரனை கைது செய்து குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி