கோமுகி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

61பார்த்தது
கோமுகி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கச்சிராயபாளையம் அடுத்து கல்வராயன் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது கோமுகி அணை. இந்த அணை 46 அடி (560 மில்லியன் கன அடி) முழு கொள்ளளவு கொண்டுள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான கல்வராயன் மலையில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலை கோமுகி அணையில் 34 மி. மீ. , மழை பதிவாகியது.

இந்நிலையில் நேற்று முன்தினம் கல்வராயன் மலையில் பெய்த கனமழை காரணமாக கல்வராயன் மலையில் உற்பத்தியாகும் பொட்டியம், கல்படை மற்றும் மல்லிகைப்பாடி ஆகிய ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் அணைக்கு வினாடிக்கு 100 கன அடி வீதம் நீர் வர துவங்கியுள்ளது. தற்போது கோமுகி அணையின் பழைய ஷட்டர்கள் புனரமைப்பு பணி மேற்கொண்டு வருவதால் அணையின் வரத்து நீர் முழுதும் கோமுகி ஆறு வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 22 அடி (577 மில்லியன் கன அடி) நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி