
ரிஷிவந்தியம்: சப் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
ரிஷிவந்தியம் போலீஸ் ஸ்டேஷனில் சப்இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த சத்தியசீலன், மாவட்ட குற்றப்பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக, மாவட்ட குற்றப்பிரிவில் பணிபுரிந்த நந்தகோபாலை, ரிஷிவந்தியத்திற்கு மாற்றம் செய்து, எஸ்.பி., ரஜத்சதுர்வேதி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, ரிஷிவந்தியம் போலீஸ் ஸ்டேஷனில் சப்இன்ஸ்பெக்டராக நந்தகோபால் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.