கடன் தகராறு தந்தை மகன் கைது

77பார்த்தது
தியாகதுருகம் அடுத்த சூ. பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் செல்லதுரை, 54; இவருக்கு முருகன், சக்திவேல், சத்தியராஜ் என 3 மகன்கள் உள்ளனர். சொத்து மற்றும் கடன் பிரச்னை தொடர்பாக தந்தையுடன் ஏற்பட்ட தகராறில் முருகன், சக்திவேல் ஆகியோர் தனது தாத்தா தங்கவேலு, 96; என்பவருடன் வசித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு 9: 00 மணிக்கு செல்லதுரை, சத்தியராஜ் ஆகியோர் தங்கவேல் வீட்டிற்கு சென்று அவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். முருகன் கொடுத்த புகாரின் பேரில் செல்லதுரை, சத்தியராஜ் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி