கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் புறவழிச்சாலையில், திமுக நிர்வாகி ஒருவரின் இல்ல சுப நிகழ்ச்சிக்காக இன்று (ஜூன் 10) வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. இன்று மாலை திடீரென சூறைக்காற்றுடன் பெய்த கனமழையின் காரணமாக பேனர் மற்றும் சாரங்கள் முறிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.