வாலிபரை தாக்கிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு

67பார்த்தது
வாலிபரை தாக்கிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு
தியாகதுருகம் அருகே விளக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகன் சுரேஷ் (வயது 31). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சின்னபையன் மகன் ஜெயராஜ் (60) என்பவருக்கும் இடையே வீட்டுமனை சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் உள்ளது. இதன்காரணமாக சம்பவத்தன்று ஜெயராஜ் மற்றும் இவரது மகன்கள் சீனுவாசன் (38), ராஜீவ்காந்தி (35), சீனுவாசன் மனைவி உமா (35) ஆகியோர் சுரேஷ் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர், சுரேசை அவர்கள் திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சுரேஷ் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின்பேரில் ஜெயராஜ் உள்ளிட்ட 4 பேர் மீதும் ப போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜீவ்காந்தியை கைது செய்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி