ஜார்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்தார். ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் மீண்டும் ஜார்கண்ட் முதல்வராக பதவியேற்க உள்ளார். நில மோசடி தொடர்பான பணமோசடி வழக்கில் ஹேமந்த் சோரன் ஜனவரி 31ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். ஜூன் 28ஆம் தேதி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.