பனாரஸ் - மும்பை எக்ஸ்பிரஸ் (12168) ஞாயிற்றுக்கிழமை காலை உத்தரபிரதேச மாநிலம் சண்டௌலி மாவட்டத்தில் ரயில் பாதையின் ஓரத்தில் இயங்கும் ஜேசிபி வாகனத்தில் மீது மோதியது. இதில் நல்வாய்ப்பாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. முகல்சரையில் உள்ள பியாஸ் நகர் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. ஜேசிபியின் பின்புறம் ரயிலில் மோதியதில் வாகனம் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதிர்ஷ்டவசமாக ரயில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என வாரணாசி கோட்ட ரயில்வே மேலாளர் தெரிவித்தார்.