மாசி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள், திருமணங்கள் நடைபெறுவதால் மல்லிகைப் பூவுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஆனால் போதிய வரத்து இல்லாததால் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மல்லிகைக்கு பெயர் போன மைலாவரம் மண்டலத்தில் கிலோ ரூ.1200 ஆக உள்ளது. மிச்சாங் புயலால் விளைச்சல் தாமதமானதால் தற்போது சராசரியாக ஒரு நாளைக்கு 50 கிலோ மகசூல் கிடைப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். இதனால், நல்ல விலை கிடைத்தாலும், பல விவசாயிகளுக்கு லாபம் கிடைக்க வாய்ப்பில்லை.