இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே கடும்
போர் நடந்து வருகிறது. பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பான ஹமாஸ் 5,000 ராக்கெட்டுகளை வீசி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதில், 250 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர், 1500 பேர் காயமடைந்தனர். இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 232 பேர் கொல்லப்பட்டதுடன் 1700க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையே
போர் நீடித்து வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.